undefined
undefined
வலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள்
தங்கள் பாதைகளில்
வலிகளை
வழித்துணை ஆக்கினர்
கண்களில் கசிந்த நீரினை
வியர்வையில்
மறைய வைத்தனர்
முதுகில் சுமையும்
நெஞ்சில் சுமையும்
நிர்ந்தரியாய் இருப்பதை மறந்தனர்
விசாரிப்புகளில்
மற்றவர்கள்
சொல்லும் போதே
தங்கள் வலிகள்
நினைவுக்கு வந்து அழுதனர்
ஓலமிட்டழுத கதைகள்
ஒதுங்கிக் கிடந்தன
ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது
ஈரத்தில் தலைசாய்க்கிறார்கள்
கண்கள் மூடப்பட்டு இருக்கிறது
ஈரம் எப்பொழுதும் நினைவுபடுத்து்ம்
உணர்வுகள் இடையே
துாக்கமும் சாத்தியமாகவே செய்கிறது
கனவுகள் தேவையற்றதாகிவிட்டன
குப்பைகளுடன் கனவுகளும் இருக்கட்டும்
பூனை விராண்டிக் கொண்டிருப்பது போல்
ஏதேதோ நடக்கிறதுதான்
ஆனால் எல்லாமே
நடக்கவே செய்கிறது
வலிகளுடன் வாழ்பவனை நீ விசாரியாதே
புண்ணை மூடும் தோலினை
சுரண்டிப் பார்க்காதே
கண்ணீர்க் கதைகளை கேட்டு
கண்ணீரில் ஏன் கதைகளை எழுத வைக்கிறாய்
விட்டு விடு
விசாரிக்கப்படாமலே
வலிகள் இருக்கட்டும்
வைரத்துடன்
நாளை அவர்கள் வருவார்கள்
வைரம் அவர்களின் அழகைப் பேசும்
வெற்றியின் கதையை
அவர்கள் அப்போது பேசட்டும்